Posts

Showing posts from May, 2020

"பூங்காத்து திரும்புமா "

காற்றின் அலைவரிசையில் பயணம் செய்யும் பாட்டை அந்தக் காற்றே விரும்பாவிட்டால் அந்த பாடகன் இதை யாரிடம் சொல்லி ஆறுதல் கொள்வான்? அந்த பூங்காற்றையே அழைத்துப்பாடுகிறான் "பூங்காத்து திரும்புமா என் பாட்ட விரும்புமா. பாராட்ட மடியில் வைச்சு தாலாட்ட எனக்கொரு தாய் மடி கெடைக்குமா?" இந்த வரிகளின் போது ஒரு ஆடு தன் குட்டியுடன் இருப்பதைப் பார்த்துவிட்டு சிவாஜியின் கண்களில் தெரியும் ஏக்கத்தை பார்க்கும் போது யாராக இருந்தாலும் தாயாக மாற எண்ணம் வரும். இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் தேடுவது ஒரு சிறு அங்கீகாரத்தை தான் .ஒரு சிறு மரியாதையை தான். சிறுமரியாதையை எதிர்பார்த்த அவருக்கு. " முதல் மரியாதை'' யே கிடைத்தால்?... ராசாவே வருத்தமா ?"  என்றவுடன் வரும் சிறு பறவைகளின் ஒலிகள், ஜானகியின்  குரலோடு போட்டி போடும் புல்லாங்குழல் இசை (இளைய) ராசாவே! இப்படி ஒரு பாடல் கிடைத்த ஆனந்தமா?) "ஆகாயம் சுருங்குமா ? ஏங்காதே  ,அத ஒலகம் தாங்காதே ,அடுக்குமா ?சூரியன் கருக்குமா ? " எங்கிருந்தோ ஒரு ஆறுதல் குரல் ஒலிக்க சிவாஜி அதிர்ந்து பின் ஆனந்தித்து பாடல் வந்த வழி பயணம் போகிறார் அந்த குயில் மகளின் முக...

"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்"

அவளோ பூவோடு பிறந்தவள். அவனோ பூகம்பத்திற்கு பிறந்தவன். சலசலக்கும் சிற்றோடையாய் அவள். சண்டமாருதமாய் அவன். வேள்வித் தீயில் இருந்து வெளிப்பட்டது போல் வேண்டுகோள்களை பட்டியலிட்டு வைத்திருக்கிறான் அவன்.அதை வெண் சாமரம் வீசுவது போல் அவள் பாடினால் பொறுத்துக் கொள்ள முடியாமல் நிறுத்தச் சொல்லி பாடத் தொடங்குகிறான் அவன்.  அவன் கேட்பவை அனைத்தும் மிகவும் சாதாரணமாக தெரியும் ஆனால் மிகவும் அரிதாகவே கிடைக்கும் விஷயங்கள்.  சத்தம் இல்லாத தனிமையும், யுத்தம் இல்லாத உலகமும் ரத்தத்தில் என்றென்றும்வேகமும்,ரகசியமில்லா உள்ளமும் இன்றைய உலகின் இன்றியமையாத தேவை தான். வலிகள் செய்யாத வார்த்தை கள் பாசாங்கு இல்லாத பாசம் நன்றி கெடாத நட்பு நடுங்க விடாத செல்வம் மூடியில்லாத முகங்கள் இவை வேண்டாம் என்று சொல்பவர்கள் யாரேனும் இருக்கிறார்களா. அவன் கேட்டவை அனைத்தும் வாழ்நாளில் என்றேனும் ஒரு நாள் நாமும் கேட்டவை தான்.  நடந்து போக நதிக்கரை , கிடந்து உருளப் புல்வெளி தொட்டுப் படுக்க நிலவு, எட்டிப் பிடிக்க விண்மீன் , பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்கும் கவிஞன் அவன். மனிதர்க்கெல்லாம் ஒரு மனம், உலகுக்கெல்லாம் சம மழை, ஊர...

தென்றல் வந்து தீண்டும் போது

கருப்பு வெள்ளை கண்களை கொண்டே நாம் வண்ணவண்ண காட்சிகள் காணுகின்றோம். ஆனால் கருப்பு-வெள்ளை காட்சிகளை மட்டும் காட்டும் கண்களைக் கொண்ட ஒரு வஞ்சிக்கப்பட்ட வஞ்சிக்கு வண்ணங்களைப் பற்றி எடுத்து ரை ப்பவர் கள் யார் இருக்கிறார்கள்? ஊமை கண்ட கனவை இந்த உலகத்திற்கு எடுத்து ரை ப்பவர் கள் யார் இருக்கிறார்கள்? இந்த வினாக்களின் வெப்பத்தில் நான் தவித்துக் கொண்டிருந்த போது  தென்றலாய் என்னை தீண்டி ஆற்றுப்படுத்த கவிஞர் வாலியும், இசை மழை பொழிந்து எனை குளிர்விக்க இசைஞானி இளையராஜாவும் கைகோர்த்தனர்.  இப்படிப்பட்ட கடினமான வினாக்களுக்கு விடை கொடுக்க கவிஞர்களையும், இசை கலைஞர்கள்களையும் தவிர வேறு யார் இருக்கிறார்கள் நமக்கு கைகொடுக்க . அந்தப் பேதைப் பெண்ணுக்கு புரிந்த எண்ணங்களாலேயே வண்ணங்களுக்கு வடிவம் கொடுக்கிறார் வாலி. அந்த அழகு கவிதையை நாம் அனைவரும் அள்ளிப்  பருகுவோம். அவதாரம் படத்தில்  நாசர் ரேவதி நடிப்பில் "தென்றல் வந்து தீண்டும் போது" பாடல். தொடக்கத்திலேயே வண்ணக் கலவைகளால் வரையப்படும் பெண் ஓவியம் அழகுக் காட்சி. ஓவியம் வரைந்து முடித்ததும் கருப்பு வெள்ளை காட்சியாக மாறி பின் முழு கருமை வண்ண...

"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது"

மாநிலம் ஆளும் மாதரசியின் மகன் அவன். இருந்தும் அவனுக்கு அன்னை இல்லை. அறிவார்ந்த ஐந்து தம்பியரின் அண்ணன் அவன். இருந்தும் அவனுக்கு தம்பியர் யாரும்  இல்லை. மேலும் தர்மத் தாயின் தலைமகன் இவன். இருந்தும் இவன் மரணத்தில் தான் மகனே என்று கூப்பிட்டு மடியேந்த அன்னையர் இருவரும் வந்தனர். மாயை என்பதன் அர்த்தத்திற்கு அகராதி எழுதுவதற்கு தான் அந்த மாயக் கண்ணன் இவனை படைத்தானோ. கண்ணனுக்கும் கர்ணனுக்கும் ஓர் எழுத்து தான் வித்தியாசம். இருப்பினும் அந்தக் கண்ணனை விட கர்ணனை ஒரு படி மேலே உயர்த்திப் பிடித்தது அவனது கருணை உள்ளமே. " உன் தர்மத்தின் பலனை எல்லாம் எனக்குத் தருவாயா ?" என்று அந்தக் கடவுளையே கர்ணனிடம் கையேந்த வைத்தது அந்தக் கருணை தான். "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா( மனிதா) வருவதை எதிர்கொள்ளடா" இது பாடல் அல்ல வாழ்க்கை பாடம். (இன்றைய காலகட்டத்திற்கு இது மிகவும் தேவையான வரிகள்) கர்ணனை நாம் யாரும் பார்த்ததில்லை, ஆனால் கர்ணன் இப்படித்தான் இருப்பார் என்று மனது ஃ பிக்ஸ் பண்ணிக் கொண்டது. காரணம் சிவாஜிகணேசன். (ராஜராஜசோழன் எப்படி இருப்பார்? நம்ப சிவா...

"நாணிக் கோணி ராணி உந்தன் "

நான் வேறு ஒரு பாட்டிற்கு விமர்சனம் எழுதத் தொடங்கி விட்டு திடீரென்று இந்தப் பாட்டிற்கு எழுதக்  காரணம் இந்தப் பாடலின் தமிழ் என்னை ஈர்த்தது. திரைப்பட பாடல்களில் பெரும்பாலும் செவிக்கு உணவில்லாத போது சிறிது கண்களுக்கும் ஈயப் படும். இந்தப் பாடலின் வரிகளும் சரி காட்சி அமைப்புகளும் சரி உங்கள் செவிகளுக்கும் கண்களுக்கும் நிச்சயம் விருந்து படைக்கும். பச்சைப்பசேல் புல்வெளிகள் , நீர் வீழ்ச்சிகள் , அந்த தண்ணீருக்குள் நிற்கும் தனிப் பாறை (அதன் மேல் கூட ஒரு சில டான்ஸ் ஸ்டெப்ஸ். கொஞ்சம் பயமாக இருக்கிறது) கே.வி. ஆனந்தின் கேமரா ஒவ்வொரு ஃ பிரேமையும் அனுபவித்து ரசிக்க வைக்கிறது.   ரெட்டை குழல் துப்பாக்கியாய் நாயகர்கள். அவர்களின் ஒற்றை குறி நாயகி. இருப்பினும் ஒருவர் மேல் வருவது தானே காதல். பெண்கள் தேர்வு எப்போதும் ப்ளே பாய்களை விட தெளிவான ஆண்களாக தான் இருக்கும். பாடலின் தொடக்கத்திலேயே தன் "மாற்றா ன்" ஐ தண்ணீரில் தள்ளி விட்டு நாயகன் காதலில் வெல்கிறார். சூர்யா (க்கள் ) மற்றும் காஜல் செம்ம பிரெஷ். இந்த மாதிரி லொகேஷனுக்கு ( அதுவும் டைரக்டர் செலவில்) போனால் பிரெஷ்ஷா இல்லாம எப்படி ? பார...

"கண்ணே, கலைமானே"

தாலாட்டுக்கள் பல ரகம். இது ஒரு தனி ரகம். உனக்குள் இருக்கும் தாய்மையை நானும், எனக்குள் இருக்கும்  தந்தையை நீயும் கண்டு கொண்ட போதுதான் நமக்குள் இருக்கும்  காதலை நாம் கண்டு கொண்டோம் என்றான் அவன்.  உனக்குள் இருக்கும் குழந்தையை நானும், எனக்குள் இருக்கும்  குழந்தையை  நீயும் கண்டு கொண்ட போதுதான் நமக்குள் இருக்கும்  காதலை நாம் கண்டு கொண்டோம் என்றாள் அவள். தன் கணவன் அல்லது காதலன் தன்னை ஒரு குழந்தையாக  நடத்த வேண்டும் என்பதுதான் எல்லா பெண்களின் எதிர்பார்ப்பும்.  ஆம் எனும் பெண்கள் கை தூக்குங்கள். 1,2,3,4 ....…ஓ.கே. கிட்டத்தட்ட  எல்லாருமே கை தூக்கி உள்ளீர்கள். (ஆண்கள், ப்ளீஸ். நோட்  திஸ் பாய்ண்ட்)  ம்ம்ம். வாழ்க்கை நாம் நினைத்த படியெல்லாம் அமைந்து  விடுகின்றதா என்ன? நினைத்தது நடக்காதவர்களின் ஆறுதலுக்காகவும்  நினைத்தது நடந்தவர்கள் ஆனந்தத்திற்காகவும் இந்த பாடல் சமர்ப்பணம். கண்ணதாசன் அவர்கள் எழுதிய இறுதிப் பாடல். அவர் இறக்கும் முன் பதிவு செய்யப்பட்ட இறவா வரம் பெற்ற பாடல். நம் மரணம் வரை மறக்க முடியாத பாடல். இசை ஞானி இளையராஜா ...

"வெண்ணிலவே, வெண்ணிலவே"

பௌர்ணமி நிலவும், பனி விழும் இரவும் கிடைத்து விட்டால் நீங்களும் நானும் கூட கவிதை எழுதலாமா என்று யோசிப்போம். அதுவே கவிஞர்களாக இருந்தால் கேட்கவும் வேண்டுமோ. அவளோ அழகி. அவனோ இளைஞன் .நேரமோ இருள், ஒளி இரண்டோடும் சேராத பொன் நேரம். ஒரு ஹிட் பாடல் கொடுக்க இதைவிட சிறந்த Situation என்ன இருக்க முடியும். அதுவும் இந்த Situation-ஐ வைரமுத்து சார் கையில் கொடுத்தால் . ஆஹா . ஒரு சில பாடல்களை  எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. அப்படி ஒரு பாடல் இது.  அவளோ பொய்க் கோபம் கொண்டு அவனைப் பேசக் கூடாது என்கிறாள். அவன் பேசத்தானே கூடாது. பாடக் கூடாது என்று சொல்லவில்லையே என்று பாட தொடங்குகிறான். அவள் கோபத்தை தணிக்க வெண்ணிலவை  விண்ணைத் தாண்டி விளையாட, ஜோடியாக அழைக்கிறான் ,ஒரு ஒப்பந்தத்தின் பேரில். விடிவதற்குள் யாரும் பார்க்கும் முன்னே அதிகாலை திருப்பி அனுப்பி விடுவதாக. (குரல், ஹரிஹரன், சாதனா ஸர்கம் ) . "மின்சார கனவு " படத்தில் இடம் பெற்ற "வெண்ணிலவே , வெண்ணிலவே " பாடல். இயக்குனர் ராஜிவ் மேனன். இந்த பாடலின் அழகு பிரபு தேவா , கஜோல் நடனத்திலா, இல்லை வைரமுத்து வரிகளிலா , A.R.ரஹ்மான் இ...

"சிநேகிதனே, சிநேகிதனே, ரகசிய சிநேகிதனே"

சிநேகிதிக்கான பாடல்கள் பல இருக்கும் போது சிநேகிதனுக்கான பாடல்கள் சில தான் உள்ளது. அவற்றுள் இந்த ரகசிய சிநேகிதனுக்கான பாடல் ரொம்பவே ஸ்பெஷல். பக்கத்து வீட்டு பெண் ஃ பீல் கொடுக்கும் ஷாலினி. பெரிய இடத்து பையன்  ஃபீல் கொடுக்கும் மாதவன். ரொம்ப அழகான ஜோடி. அதிலும் குட்டியா க்யூட்டா,துறு துறுன்னு இருக்கும் ஷாலினியை எனக்கு மிகவும் பிடிக்கும். Short girls are Sweet, you know?. அவங்க Free ஹேர் ஸ்டைல் , டீசென்ட் டிரஸ் மேக்கிங், Beautiful .ஷாலினியின் கடைசி படம் இது.  அதன் பிறகு அவரின் ரகசிய சிநேகிதன் அஜீத்தை , காதல் கணவனாக கரம் பிடித்தார். வாழ்க வளமுடன் ! மாதவனை பார்த்து “மேடி” “மேடி” என்று மேட் (Mad) ஆகித் திரிந்த இளம் பெண்கள் எத்தனை பேர். மாதவனின் முதல் படம் இது ! சிநேகிதனாய் ஒரு கணவன் கிடைத்து விட்டால், அந்த பெண்ணின் வாழ்க்கை சொர்க்கம் தான். "சிநேகிதனே, சிநேகிதனே, ரகசிய சிநேகிதனே" என்று சாதனா ஸர்கம் தன் இனியக் குரலில் பாடலைத் தொடங்கும் போதே எல்லோர் மனமும் “அலை பாயுதே” .  A.R.Rahman அற்புதமான இசையில் மணிரத்னம் இயக்கத்தில் மற்றும் ஒரு சூப்பர் ஹிட் பாடல் இது. இனி ஷாலினி தனது ...

"சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் "

அவனோ காட்டு அருவி . அவளோ வீட்டு க்  குருவி . கற்பனை சிறகு விரித்து வானில் பறக்க அவளுக்கு விடுக்கிறான் அழைப்பு . இருப்பினும் மனதுக்குள் பதைப்பு . இல்லை என்று சொல்லி விடுவாளோ ? " இல்லை , இல்லை சொல்ல ஒரு கணம் போதும் , இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் . என்ன சொல்ல போகிறாய் ? என்ன சொல்ல போகிறாய் ?" என்று பாடலைத்   தொடங்குகிறார் அஜீத் .   அந்த ஃபிரேமில் அஜித் தை பாருங்கள் . ச்சோ ஸ்வீட் . வாவ்!  மேஜிக்கல் எக்ஸ்பிரஷன் அஜீத் சார் ! இந்நேரம் பாடலின் படத்தை “ கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன்” என்று துள்ளி க் குதித்து இருப்பீர்கள். அடுத்து தகிக்கும் பாலையில் ,   தண்டவாளப்   பாதையில்   அஜித் நடந்து வரும் போது   பின்னணியில் ஒலிக்கும் இசையை கேட்கும்   போ து , நாம் திடும் என வழுக்கி இசை எனும் பள்ளத்தாக்கில் ,  தட தட வென  நழுவி நழுவி கீழே, கீழே சென்று கொண்டே இருப்பது போன்ற ஒரு உணர்வு வருகிறதா   இல்லையா ? அப்புறம் அஜித் மயங்கிக் க...

"பூங்காற்றிலே உன் சுவாசத்தை "

இன்றைய பாடல் மணிரத்னத்தின் "உயிரே " படத்தில் இடம் பெற்ற "பூங்காற்றிலே உன் சுவாசத்தை " பாடல். வைரமுத்து எழுதி AR.ரஹ்மான் இசையமைத்து ,ஸ்வர்ண லதா, உன்னி மேனன் பாடிய பாடல். மணிரத்னம்   பாடலை படமாக்கிய விதமும், AR.ரஹ்மான் இசையும், வைரமுத்துவின் பாடல் வரிகளும் பாடலை சூப்பர் ஹிட் ஆக்கியது. காதல் என்பதே ஒரு தேடல்தான் . நம் நாயகனோ காற்றின் அலைவரிசையில் கலம்  (காலம்)  செலுத்துபவன் ( ஆல் இந்திய ரேடியோவில் பணி ). அவன் கண் முன் மின்னலைப் போல் தோன்றி மறைந்த தன் காதல் தேவதையை தேடும் பணியையும் தன்   அலுவலகப் பணியோடு சேர்த்தே தொடங்குகிறான். பூங்காற்றில் தன் காதலியின் சுவாசத்தை தேடிப் பார்க்கும் நூதனமானவன் இவன். கடல் மேல் விழுந்த ஓர் துளியை (அது காதலியின் கண்ணீர்த்   துளியா , வியர்வைத்   துளியா தெரியவில்லை) தேடிப் பார்க்கும் வித்தகன் இவன். அவன் தேடத் தேட பாடல் வரிகளிலும், ARR ன் இசையிலும் நாம் முற்றிலுமாக தொலைந்து போகிறோம். அவன் தூது அனுப்பிய "காற்றின் அலைவரிசை கேட்கிறதா ?, கேட்கும் பாட்டில்   ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா?" காதல்...

"சுந்தரி கண்ணால் ஒரு சேதி"

இன்று   நாம் சுவைக்கவிருக்கும் பாடல் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" . மணி ரத்னம் அவர்களின் மணியான   படைப்பு. தளபதி படத்திலிருந்து. இசை நம்ம இளைய ராஜா. ஒரு மென்மையான காதல் பாடலில் ஒரு போர்க்கள பின்னணி இசையைப் புகுத்தும் புதுமை இளைய ராஜாவுக்கும் மட்டுமே கை வந்த கலை. இதை ஒரு போர்களப் பின்னணியில் எடுத்த மணிரத்னத்தின்   கற்பனைத் திறனை பாராட்டாமல் இருக்க முடியாது. பாடலை எழுதியவர் வாலிப நெஞ் ச ங்களைக்   கொள்ளை கொண்ட வாலிப வாலி . SPB, ஜானகி யின் மனதை மயக்கும் மந்திர குரலில்.   ரஜினி   குதிரையில் வரும் முதல் காட்சியில் ,ஷோபனா அருகில் வந்ததும் இறங்கப் போகிறார் என்று நினைக்கையில் "அலேக் " காக ஷோபனாவை தூக்கி குதிரையில் வைத்துக்கொண்டு பறக்க ஆரம்பித்ததுமே பாட்டு "டேக் ஆஃப் " ஆகி விடும். அதன் பிறகு வருவதெல்லாம் கவிதை, கவிதை. "என்னையே தந்தேன் உனக்காக, ஜென்மமே கொண்டேன் அதற்காக" என்று காதலுக்காக தன்னையே அற்பணித்த   நாயகி. “தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை ” என்கிறாள் நாயகி. “வானிலவை நீ கேளு, கூறுமென் வேதனை ” என்று வானிலவை தூதனுப்புகிறான் நாயகன். “என்னைத்தான் அன்...

"இஞ்சி இடுப்பழகா"

இன்று   நாம்   சுவைக்கவிருக்கும்   பாடல் தேவர் மகன் படத்தில் . இளையராஜா வின் இசையில் . கமல் ஹாசன் ,  எஸ். ஜானகி குரலில் வரும் "இஞ்சி இடுப்பழ கா " பாடல். பிரிக்க முடியாதது எதுவோ என்று கேட்டால் இப்போது தருமி கூட சொல்லி விடுவார் "கமலும், காதலும்" என்று. காதல் இளவரசன் என்றால் சும்மாவா. இளவரசனாக இருப்பதில் ஒரு வசதி. அரசர்களுக்கு வயதாகி விடும். இளவரசர்கள் எத்தனை வயதானாலும் இளவரசர்கள்தான். கமலுக்கும் என்றுமே வயதாவதில்லை. பெயர் வைத்தவரின்   தீர்க்க தரிசனம் வாழ்க. (கமல் ஆர்யாவிற்கு காதல் இளவரசன் பட்டத்தை கொடுத்து விட்டாலும்  எங்கள் போல்  இன்னும் பலருக்கு கமல்தான் "காதல் இளவரசன்". இந்த பாடலை பார்த்தாலே எல்லோரும் ஒத்துக் கொள்வீர்கள். இது போல் இன்னும் எத்தனையோ பாடல்கள்.)    நிர்பந்தத்தால் நடக்கும் திருமணத்தில், இரு மனங்களுக்கு இடையில் உருவாகும் பந்தம். அதை அழகாக வெளிப்படுத்தும் பாடல்.   "காத்துதாங்க வருது" ரேவதியின் அப்பாவித்தனமும், கமலின் காதல் தனமும், "மறந்துருவேன்னீங்களே" என்ற இடத்தில், கமலின் சிரிப்பு சத்தமும், "மறக்க மனம...

"ஆயிரம் நிலவே வா"

இன்று   நா ம்  சுவைக்கவிருக்கும் பாடல்  காதல் ரசம் பொங்கி த்  ததும்பும் ஒரு பாடல். அடிமைப் பெண் படத்தில் இடம் பெற்ற  " ஆயிரம் நிலவே வா" பாடல் தான் இன்றைய பாடல் . கே . வி . மஹாதேவன் இசை.  பி . சுசீலா , S.P.B பாடிய பாடல் . S.P.B யின் முதல் பாடல் . S.P.B க்காக ஒரு மாதம்   காத்திருந்து ரெகார்ட் பண்ணப்பட்ட பாடல் . ஆஹா . இந்த குரலுக்காக ஒரு மாதம் காத்திருக்கலாம் .  தப்பே இல்லை . அவரின் குரலை கடவுளே காதல் பாடல்களுக்காக   ஸ்பெஷல் ஆக வடிவமைத்து அனுப்பியிருப்பாரோ என் ன வோ .  S.P.B க்காக ஒரு மாதம் காத்திருந்து ரெகார்ட் பண்ணக்  காரணம் எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை. காதல் என்பதே முரண்பாடுகளுக்கு இடையே ஏற்படும் சமன்பாடுதான் . கவிதைக்கு பொய் மட்டும் அல்ல , அந்த முரண்களும் அழகுதான் . " நள்ளிரவு துணையிருக்க , நாமிருவர் தனியிருக்க" என்ற வரிகளில் உள்ள அந்த முரண்கள் இந்த பாடலுக்கு எவ்வளவு அழகை அள்ளித் தருகிறது என்பதை அனுபவியுங்கள் . பொய்கைக்கு ம்  வேர்க்குமா ? இதோ  ...