அதிசய ராகம் ஆனந்த ராகம் முழு பாடல் வரிகளுடன்
ஒரு கோப்பையிலே குடியிருந்த அந்த கோமானின் பாடல்களை கேட்கும் நமக்கும் அல்லவோ மயக்கம் வருகிறது. இருந்தும் அவரது பாடல்க ளை ரசிக்காமலா இருக்க முடிகிறது? இசையரசி அவள் . இசை ரசிகன் அவன். ரசனை கொஞ்சம் எல்லை மீறிப் போக அந்த இசையரசியையே ரசிக்க தொடங் குகி றா ன் அவன். அவன் யாரையோ காதலிக்கிறான் என்று தெரிகிறது. ஆனால் யார் அவள்? என் இசை வகுப்பிற்கு பல பெண்கள் வருகிறார்கள். கல்யாணியும் வருகிறாள், கமலாவும் வருகிறாள் . எப்படி தெரிந்து கொள்வது என்றெண்ணிய அவள் அவனிடமே இந்த கேள்விக்கணையை தொடுக்கிறாள் " உன் காதல் நாயகி யார் ? அவள் பெயர் என்ன ? ராகமா? மலரா? என்று. இந்தக் கேள்வியின் நாயகிதான் அவனின் காதல் நாயகியும் என்ற உண்மை அறியாமல். அப்பொழுது கே.ஜே. யேசுதாஸ் தன் மயக்கும் மந்திர குரலில் பாடலை தொடங்குகிறார் . அப்போது தொடங்குகிறது ஒரு "அதிசய ராகம்" "அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம்" முதல் இரண்டு வரிகள் முடிந்ததும் வரும் அந்த மிருதங்க இசை உங்கள் மனதை துள்ளாட்டம் போட வைக்கும். அது ஒரு "ஆனந்த ராகம்" . இசை மெல்லிசை மன்னர் எம்எஸ்வி. யாராக இருக்கும் ?அவள் யார...