தொடு வானம் /Thoduvanam Thodugindra
ஒரு நான்கு நிமிட பாடலுக்குள் இவ்வளவு விஷயங்களை வைக்க முடியுமா என்று ஆச்சரியப்பட வைக்கும் ஒரு கண்டெண்ட் ஃபுல் சாங்தான் இது. ரொமான்ஸ் , கண்ணீர், ஹியூமர், த்ரில், ஒரு மர்டர் அனைத்தும் ஒரு பாடலில்.டைரக்சன் கே வி ஆனந்த். ஜென்ம ஜென்மமாய் தொடரும் காதல் அதை முன்னமே அறிந்த நாயகி. இப்பொழுது தான் அறிந்த நாயகன்.இந்த ஜென்மத்திலும் அவள் கிடைக்காமல் போய் விடுவாளோ என்ற வேதனையிலும் பதற்றத்திலும் பாடும் பாடல். தொடக்கத்திலேயே வரும் வயலின் மியூசிக்கை கேட்கும் போதே அந்த இசை கண்கள் மூடி ரசிக்கச் சொல்லும். ஆனால் அடுத்தடுத்து அடுக்கடுக்காய் வரும் காட்சிகள் உங்களை கண்கள் திறந்து ரசிக்கச் செய்யும். தொடக்கக் காட்சியில் கார் ஓட்டிக் கொண்டு வரும் தனுஷ் செம சார்மிங். "பாய் நெக்ஸ்ட் டோர்" ஃபீல் கொடுப்பதுதான் தனுஷின் பிளஸ். ஹரிஹரன் வாய்ஸ் செம சூப்பர். சோகத்தை அலை அலையாய் பரப்புகிறது அவரின் குரல். "தொடு வானம் தொடுகின்ற நேரம் தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும் தொடு வானமாய் பக்கமாகிறாய் தொடும் போதிலே தொலைவாகிறாய்" இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியது, உயிரெல்லாம் உருகியது. உருகி முடிப்ப...