Posts

Showing posts from 2020

பொன்மாலை பொழுது

Image
  ஒரு  பொன்மாலை பொழு தி ல்,   வைரமுத்துவுக்கு திரையுலகம் வாசல் திறந்து, வாரியணைத்துக் கொண்ட பாடல் . வைரமுத்து, எஸ்பிபி ,இளையராஜா, பாரதிராஜா என்ற வெற்றிக்கூட்டணி "ஹே ஹோ ஹோ லல்லல்லா" என்ற எஸ்பிபி தொடங்கும்போதே நமக்குள் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்கிறது இல்லையா.  சூரியன் மறையும் அந்தி வேளையில் வானம் கொள்ளும் சிவப்பு நிறத்தை நானும் பார்க்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன் எவ்வளவு அழகான வர்ணஜாலம் என்று. நமக்கு கற்பனை அதைத்தாண்டி செல்லவே மாட்டேன் என்கிறது. ஆனால் வைரமுத்துவுக்கோ அது வான மகளின் நாணச் சிவப்பாக தெரிகிறது.  உலகமே பார்க்க வெளிர் நீல உடை நெகழ்த்தி, கரு நீல உடை உடுத்தும் வானமகள் நாணாமல் என்ன செய்வாள்? பாவம் பெண்ணல்லவா? அவளின் அந்த வெட்கச் சிவப்பை கவிஞர்கள் கண்டு சொன்னால்தான் உண்டு. அதனால் என்ன, அவர்கள் சொன்ன  பிறகாவது   ரசித்து கொள்வோம். வைரமுத்துவின் வர்ணனை வரிகளையும், SPB யின் குரலையும் கேட்டுத்தான் வானமகள் நாணுகிறாளோ என்றும் ஒரு சந்தேகம் எனக்கு. "இது ஒரு பொன்மாலை பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்" இரவின் நிலவொளி மரங்களின் வழியே நுழை...

என்னை என்ன செய்தாய் வேங்குழலே

Image
 நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.  இந்த கண்ணன் கைக்குழலுக்கும், காதல் கன்னியருக்கும் அப்படி என்ன ஒரு பகையோ தெரியவில்லையே? இந்த சௌந்தர்ய நாயகி குழலைப் பார்த்து கேட்கும் கேள்வியை நீங்களும் கேளுங்கள்.  "என்னை என்ன செய்தாய் வேங்குழலே எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே….. நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய் இந்த இள மனம் இளகிடவே என்னை என்ன செய்தாய் வேங்குழலே… ஏ…ஏ….. " சௌந்தர்யா செம அழகு இந்த பாட்டில்.  பாடலின் தொடக்க ஆலாபனையில் குளோசப்பில் காட்டும் அவர் முகம்,  கூந்தலில் சூடிய மல்லிகைச்சரம் , நீண்ட நெற்றி திலகம் , சேலைத் தலைப்பை        தோளை சுற்றி போர்த்திக் கொள்ளும் பாந்தம் அருமை.  வேள்வியின் விளைவென்பது தன்னை அறிதல். அந்த இன்பத்தை உணர்தல்.  என்றும் இசை வேள்வி நடத்தி , நல்லின்பம் படைத்த நாயகி தன்னைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்  "வேறு ஞாபகங்கள் வருடாமல் நானிருந்தேன்." "எய்தவன் இருக்க அம்பை நோவது  ஏன் ?" என்று உணர்ந்த நாயகி இப்பொழுதுதான் எய்தவனை பற்றி...

கப்பலேறிப் போயாச்சு

Image
  நம்மில் பாதிப்பேர் சுதந்திரம் கிடைத்தபோது பிறந்து இருக்கவே மாட்டோம் .  இந்த சுதந்திர குழந்தையை பெற்றெடுக்க பாரதத்தாய் இழந்தவை எத்தனை? எத்தனை கண்ணீர்? எத்தனை செந்நீர்? எத்தனை வலிகள்? எத்தனை பலிகள்? அத்தனைக்கு பிறகு  அந்தக் குழந்தையை கையில் ஏந்தும் போது கிடைக்கும் ஆனந்தம் தான் எத்தனை எத்தனை? அந்த சுதந்திம் பெற்ற கணத்தை , அந்த ஆனந்தத்தை நாம் அனுபவித்தால் எப்படி இருக்கும்?  ஒரு டைம் மெஷினில் ஏறி அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டு 1947 ஆகஸ்ட் 15 அன்றைக்கு செல்வோமா? இப்போ ரொம்ப கஷ்டமான விஷயம் இல்லை?ஓ கே . ஒரு சிம்பிளான விஷயம் சொல்கிறேன் இந்த பாட்டை பாருங்கள். எஞ்சாய் தட் மொமென்ட். முதலில் அந்த ப்ளூட் இசை. எனக்கு ஒரு சந்தேகம் இந்த புல்லாங்குழல் இசை மட்டும் பாரெங்கும் ஒரு பரவச காதல் உணர்வை பரவ விட்டு விடுகிறதே எப்படி என்று?  அது காதல் கண்ணனின் கைக்குழலாக இருப்பதாலோ? பிறகு வரும் கோரஸ் ஒலி கேட்கும் போது உங்களுக்குள் ஒரு " ஜோஷ்" கண்டிப்பாக உருவாகும். ஜோஷ் சரியான தமிழ் அர்த்தம் ஆவேசம். மியூசிக் ஏ.ஆர்.ரஹ்மான் என்றால் கேட்கவா வேண்டும்?  "கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச...

சின்னத் தாயவள்

Image
தாய்மை என்பது வரம் இதுவே உலக வழக்கு. ஆனால் அந்த தாய்மையே சாபம் ஆனால் இவள் எங்கு தொடுப்பாள் வழக்கு. அந்தக் கன்னித் தாய் குந்தி பெற்றெடுத்த குழந்தை பார்போற்றும் கர்ணன். இந்த கண்ணீர் தாய் பெற்றெடுத்த குழந்தை ஊர் போற்றும் நம் நாயகன்  ஒரு கயவனின் கிறுக்களில் விளைந்த கவிதைக்  குழந்தை அவன். அதனால் கவிதை ருசிக்காமல் போய்விடுமா என்ன? பத்து மாதம் சுமந்த பந்தம் நினைக்காமல் போய்விடுமா? பிறந்தவுடன் பிரிந்த அந்தப் பிஞ்சு குழந்தையின் நினைவை  நெஞ்சில் சுமந்து  கண்களில் கண்ணீர்  சுமந்து அலையும் அபலைத் தாய் இவள். ஒருமுறை கூட தாயின் திருமுகம் காணாத அதிர்ஷ்டம் இல்லா மகன் இவன். தன் தாய் இவள்தான் என்று தெரிந்த பின் மறைந்திருந்தாவது அவள் மலர் முகத்தை காணத் தவிக்கும் மகனாக ரஜினியின் நடிப்பு அப்பப்பா என்ன பெர்ஃபார்மன்ஸ். ஃபர்ஸ்ட் கிளாஸ்.   பாடல் தொடங்கும் முன் வரும் மனதை பிழியும் இசை அதைத் தொடர்ந்து வரும் ஜானகியின் இதயம் பிசையும் குரல். ஜானகி தன் பிஞ்சுக் குழந்தையை கையில் வைத்துக்கொண்டே இந்த பாடலை பாடி இருப்பாரோ என்று நினைக்க வைக்கும் குரல்..  ஒரு குழந்தைக்கு தாயான போது அ...

தொடு வானம் /Thoduvanam Thodugindra

Image
ஒரு நான்கு நிமிட பாடலுக்குள் இவ்வளவு விஷயங்களை வைக்க முடியுமா என்று ஆச்சரியப்பட வைக்கும் ஒரு கண்டெண்ட் ஃபுல் சாங்தான் இது. ரொமான்ஸ் , கண்ணீர், ‌ஹியூமர், த்ரில், ஒரு மர்டர் அனைத்தும் ஒரு பாடலில்.டைரக்சன் கே வி ஆனந்த்.  ஜென்ம ஜென்மமாய் தொடரும் காதல் அதை முன்னமே அறிந்த நாயகி. இப்பொழுது தான் அறிந்த நாயகன்.இந்த ஜென்மத்திலும் அவள் கிடைக்காமல் போய் விடுவாளோ என்ற வேதனையிலும் பதற்றத்திலும் பாடும் பாடல். தொடக்கத்திலேயே வரும் வயலின் மியூசிக்கை கேட்கும் போதே அந்த இசை கண்கள் மூடி ரசிக்கச் சொல்லும். ஆனால் அடுத்தடுத்து அடுக்கடுக்காய் வரும் காட்சிகள் உங்களை கண்கள் திறந்து ரசிக்கச் செய்யும். தொடக்கக் காட்சியில் கார் ஓட்டிக் கொண்டு வரும் தனுஷ் செம சார்மிங். "பாய் நெக்ஸ்ட் டோர்"  ஃபீல் கொடுப்பதுதான் தனுஷின் பிளஸ். ஹரிஹரன் வாய்ஸ் செம சூப்பர். சோகத்தை அலை அலையாய் பரப்புகிறது அவரின் குரல். "தொடு வானம் தொடுகின்ற நேரம்  தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும் தொடு வானமாய் பக்கமாகிறாய் தொடும் போதிலே தொலைவாகிறாய்" இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியது, உயிரெல்லாம் உருகியது. உருகி முடிப்ப...

மயக்கமென்ன இந்த மௌனமென்ன /Mayakkam Enna Indha Mounam Enna

Image
இந்த உலகத்தை நிற்காமல் சுழல வைத்துக் கொண்டிருக்கும் ஒற்றை மந்திரச்சொல் "காதல். " உலக உயிர்களுக்கெல்லாம் தாஜ்மஹால் மூலம் தன் காதலை உரக்கச் சொல்லிய ஷாஜகான்  , தனது காதலி மும்தாஜுக்கு தன் காதலை உணர்த்தி இருப்பானா என்ற சந்தேகம் என் மனதிற்குள் இன்னும் இருக்கிறது.  அந்த விஷயத்தில் இந்த ஜமீன்தார் அந்த ஷாஜகானை மிஞ்சிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.  நாமெல்லாம் காதல் பரிசளிக்க என்ன செய்வோம் ? ஒரு கிரீட்டிங் கார்டையோ,  ஒரு தாஜ்மஹால் பொம்மையோ, வாட்ச் அல்லது   மொபைலையோ தேர்ந்தெடுப்போம். மாதம் முத ல் தேதியா, கடைசி தேதியா என்பதைப் பொறுத்து பரிசு மாறுபடும். இவர் அளித்த காதல் பரிசு பாருங்கள் "இது இறந்து போன மும்தாஜுக்காக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல உயிரோடு இருக்கும் என் காதல் தேவதைக்காக நான் கட்டிய வசந்த மாளிகை"  என்று நாயகன் கூறும்பொழுது நாயகி தடாலென்று மயங்கி விழாமல் இருந்ததுதான் ஆச்சரியம்.  நாயகிக்கும் நாயகனுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருந்தும் நாயகனின் காதல்,  நாயகியை அந்த மலை உச்சிக்கே தூக்கிச் சென்று விடுகிறது அ ந்த "ஆனந்த" அதிர்ச்சியில...