Posts

Showing posts from June, 2020

கண்ணான கண்ணே /Kannana Kanne

ஒவ்வொரு தந்தைக்கும் தன் குழந்தை அதுவும் பெண் குழந்தை இளவரசி தான். தேவதைதான். தேவதைகளிடம் கேட்க ஆயிரம் வரங்கள் இருக்கும், தேவதைகள் பற்றியக் கனவுகளும் ஆயிரம் இருக்கும். "கண்ணான கண்ணே கண்ணான கண்ணே " என்று சித் ஸ்ரீராம் தொடங்கும் முதல் வரியே இது குரலா, இல்லை குழலா என்று நம்மை மயங்க வைக்கிறார். என்ன இனிமை. கண்ணே,  மணியே என்று அழைப்பதை விட "கண்ணான கண்ணே  " என்ற அழைப்பில் என்ன ஒரு அழகு ததும்புகிறது. அவளின் பிஞ்சு விரல் ஸ்பரிசத்திற்காக ஏங்கி கிடக்கும் தந்தை,  அவளின் கோபம் தாளாமல் அஜித்தின் கண்கள் கண்ணீர் பொழிய , அதை தாளாத வானமும் மழைநீர் பொழிய தன் கண்ணீரை மழைநீரில் மறைக்க காரை விட்டு இறங்குகிறார் அஜித். தன் தேவதை குழந்தையிடம் அவர் கேட்கும் வரங்கள் இப்படி நீள்கிறது "கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாய வா புண்னான நெஞ்சை பொன்னான கையால் பூ போல நீவ வா நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும் என் ஏக்கம் தீருமா நான் பார்த்து நின்றேன் பொன் வானம் எங்கும் என் மின்னல் தோன்றுமா" அப்பா என்று தெரியாமலே அந்த பெண் குழந்தை அஜித்துடன் கொண்டாடும் பாசம் , அந்த மழைக் காட்சி , அப்புறம் ...

எவனோ ஒருவன் வாசிக்கிறான்/ Evano Oruvan

நெருங்கினால் சுடும் விட்டு விலகினால் விடும் நெருப்பு. இதுவே நான் அறிந்த உண்மை. "தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதையா நந்தலாலா" என்று பாட நான் பாரதி இல்லை ஒரு பாமரன். ஆனால் தள்ளி செல்ல செல்ல சுடும் நெருப்பு ஒன்று உண்டு. "விலகினால் சுடும் வினோத நெருப்பு.  காதல்!"  இதோ இவள் அவனை விட்டு விலகி வந்து விட்டாள் . விலகினால் சுடும் காதல் நெருப்பு இவளை மட்டும் விட்டுவிடுமா?  ஊரெங்கும் புயலும் மழையும். இவள் உள்ளத்திலோ புயல் , விழிகளிலோ  மழை.  இந்தக் கண்ணனுக்கும் ராதைக்கும் இடையில் அந்த புல்லாங்குழலின் தூது. இருவரையும் இணைக்குமா? இறுதியில் இனிக்குமா? பார்ப்போம் பாடலை.  எவனோ ஒருவன் வாசிக்கிறான் என்று தொடங்கும் முதல் வரியிலேயே நாம் மூழ்கிப்போய் அவர் குரலின் பின்னே பயணம் செல்ல ஆரம்பித்து விடுகிறோம், எங்கே இருந்து அவன் வாசிக்கிறான் என்று தேடி .  ஏ ஆர் ரகுமானின் இசையும் நமக்கு துணையாக வருகிறது. இசைக் கலைஞர்களுக்கு இசை கோர்ப்பது ஒரு தவம் என்றால், நம்மை போன்றோருக்கு இசை கேட்பதே ஒரு தவம் தான் . மாதவனோ ஷாலினிக்காக  வாசிக்க  ரஹ்மானோ...

சொன்னது நீதானா /Sonnadhu Needhana

இன்னொரு நேயர் விருப்ப  பாடல் இது. தன் கணவனையே கடவுளாக நினைக்கும் தமிழ் நாயகி அவள். கடவுள் கைவிட்டு விட்டான் என்பதை கூட நம்பி விடுவாள்.  ஆனால் தன் கணவன் கைவிட்டு விட்டான் என்பதை  நம்ப மறுக்கும் பெண் மனம்.  அவன் அப்படி என்ன சொல்லக் கூடாத விசயத்தை சொல்லிவிட்டான். கேட்க கூடாததை கேட்டு விட்டான்.   வரவிருக்கும் நாட்களில் நடைபெறவிருக்கும்  அறுவை சிகிச்சை வெற்றி பெறாமல் அவன் மரணிக்க நேர்ந்தால் வேறு ஒருவரை மணந்து மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதே அவன் கேட்டது. தன் மனைவி மேல் என்ன ஒரு காதல் இருந்தால் இப்படி ஒரு வார்த்தை அவன் வாயிலிருந்து வரும்? (படம் வெளிவந்த வருடம் 1962. விதவைத் திருமணம் என்றாலே நினைத்து கூட பார்க்க முடியாத காலகட்டம் அது அந்த சமயத்தில் இப்படி ஒரு புரட்சிகரமான கருத்தை முன்வைத்ததற்கே ஸ்ரீதருக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்) இப்படி ஒரு வார்த்தையை கொடுமைக்கார கணவன் வாயிலிருந்து கேட்டாலே தாங்க முடியாது ஒரு பெண்ணால். இவனோ மணமகளையே திருமகளாக நினைத்தவன்.  அவளோ திருமகளுக்கேற்ற  திருமாலாக அவனையே நினைத்தவள். வேதனையில் அவள் இதயமே வெடித்துவிட...

என்னவளே அடி என்னவளே/Ennavale Adi Ennavale

நாமெல்லாம் பேனா பென்சில் கார் சாவி இது போல எதையாவது காணாமல் போட்டுவிட்டு தேடிக் கொண்டிருப்போம் ஆனால் இந்த நாயகனோ இதயத்தை காணாமல் போட்டுவிட்டு தேடிக் கொண்டிருக்கும் வினோதமானவர். "காதலன்" இதயம் காதலியின் கால் கொலுசை தவிர வேறு எங்கே காணாமல் போயிருக்க கூடும். அதை அறிந்து தான் அவர் காதலியின் கால் தடத்தை தேடி காத்துக் கொண்டிருக்கிறார்.  காத்திருந்தால் நிமிஷமும் வருஷம் ஆவது இயல்பு தானே. "என்னவளே அடி என்னவளே " என்ற உரிமை குரலிலேயே காதலியை மயங்க வைப்பதோடு நம்மையும் கட்டிப்போட்டு விடுகிறார் உன்னி கிருஷ்ணன் தனது வசீகரக் குரலில். "என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்து விட்டேன் உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன் காலடி தேடி வந்தேன்"  கழுத்துவரை காதல் வந்து இரு கண்விழி பிதுங்கி நின்றால் காதல் என்பது பெரும் அவஸ்தைதான். காதலைச் சொல்ல சென்றால் மட்டும்  வாய்மொழி மறந்து நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்கிறது என்று பலர் சொல்லக் கேள்வி. இவருக்கோ பாவம் வாய் மொழி தாய்மொழி இரண்டுமே வசப்பட வில்லையாம். (பாடிய...

பூவில் வண்டு கூடும்/ Poovil Vandu Koodum

அந்த வனத்தில் பூத்த அழகிய பூ அது. பூ பூத்த செய்தியை வண்டிற்கு யார் கூறியது. பூங்காற்றே அதை வண்டின் காதில் ஓதியது. காதல் கொண்ட வண்டு வந்து பூவில் தேன் அருந்தியது. நாணம் தாளாத வண்ண பூவோ கண்கள் மூடியது. " இப்படி ஒரு கற்பனை வைரமுத்துவின் எண்ணத்தில் உதித்தது . பாடலோ எஸ்பி.பி பாடியது. "பூவில் வண்டு கூடும், கண்டு பூவும் கண்கள் மூடும் . " அதைக்கண்ட மற்ற பூக்கள் சும்மா இருக்குமா. எல்லாம் சேர்ந்து ஒரு மாநாடு நடத்தின. மாநாட்டின் பேசுபொருள் " அதோ பாருங்கள், அவளின் காதலன் வந்துவிட்டான்." வண்டுகள் எல்லாம் சேர்ந்து தாலாட்டு பாடின. தாலாட்டின் பாடுபொருள் ''அவர்கள் காலமெல்லாம் இப்படியே  மகிழ்ந்து கண்ணுறங்கட்டும் " பூவினம்     மாநாடு போடும் ,வண்டுகள் தாலாட்டு பாடும் .  நம்தம் நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்" என்ன ஒரு அழகான வரிகள். பாரதிராஜாவின் காதல் ஓவியம் இது. படத்தின் நாயகன் ஒரு பாடகன் ஆனால் பார்வையற்றவன். அவன் பாடலில் திளைத்த நாயகியும் கண்களை மூடினாள். அவள் இசையில் மயங்கி கண்கள் மூடினாளா ? இல்லை நாயகன் பார்க்காத உலகத்தை தான் பார்க்க வேண்டாம் என்ற எண்ணிக் ...

சிப்பி இருக்குது, முத்தும் இருக்குது /Sippi Irukudhu Muthum Irukudhu

நேரம் போதவில்லை என்று ஓடிக் கொண்டிருந்த அனைவரும் நேரம் போகவில்லை என்று அமர்ந்து இருக்கின்றோம். ஆனால் சிப்பி இருந்தும் முத்தும் இருந்தும் திறந்து பார்க்க நேரமில்லாமலும், சிந்தை இருந்தும் சந்தம் இருந்தும் கவிதை பாட நேரம் இல்லாமலும் தவிக்கும் இந்த (உலக ) "நாயகன்'' க்கு நாமும் தான் கொஞ்சம் நேரம் வழங்கலாமே. சிந்தை மயக்கும் சந்தம் தரும் இசையரசி ஸ்ரீதேவி . சந்தத்திற்கு சங்கீதம் படிக்கும் தமிழ்கவி கமல்ஹாசன். புத்தம் புதிதாய் பூத்த மஞ்சள் ரோஜாவாய் ஸ்ரீதேவி மிளிர்கிறார்.  குர்தா மற்றும் குறுந்தாடியுடன் கவி அவதாரம் எடுத்திருக்கும் கமல்ஹாசன். சில பாடல்கள் கேட்டால் அந்த பாடலை மறுபடி மறுபடியும் முணுமுணுத்துக் கொண்டே இருப்போம் . அந்த மாதிரி பாடல் இது. எம் எஸ் வி , கண்ணதாசன் இணைந்தால் இசைக்கும், தமிழுக்கும் கேட்கவா வேண்டும். எஸ்பிபி ஜானகி இணைந்தால் இனிமைக்கும் அழகுக்கும் கேட்கவா வேண்டும். கே பி டைரக்ஷனில் "வறுமையின் நிறம் சிவப்பு. (சிறப்பு)" காஸ்ட்யூம் சேஞ்ச் இல்லை ,லொகேஷன் சேஞ்ச் இல்லை , ஆனால் என்ன ஒரு பாடல் பாருங்கள்.  இடையிடையே வரும் எஸ்பிபி யின் டயலாக்கை கேளுங்கள் "கம...

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "

உலகத்தில் மனிதர்கள் இரண்டே பிரிவினர். ஒரு பிரிவினர் காதலித்துக் கொண்டிருப்பவர்கள் . இன்னொரு பிரிவினர் காதலிக்க ( கிடைக்காதா என்று ஏங்கிக்) காத்துக் கொண்டிருப்பார்கள் . காதலே இல்லாதவர்கள் மனித ஜாதி அல்ல ,அல்ல ,அல்ல.  அதையும் தாண்டியவர்கள். பொய் சொல்லக்கூடாது காதலி என்கிறான் ஒருவன் . "ஒரு பொய்யாவது சொல் கண்ணே " என்கிறான் இவன். நீ காதலிக்கவில்லை  என்ற உண்மையோடு வாழ்வதைவிட நீ காதலிக்கிறாய் என்ற பொய்யோடு வாழ்வது சுலபம் என்கிறான் இவன். ஏனென்றால் உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தானே.  பாடகர் ஹரிஹரன் தன் உருகும் குரலால் , பிரசாந்த் ,சிம்ரன், ரமேஷ் அரவிந்த் அனைவரையம் பின்னுக்குத்தள்ளி முன்னே நிற்கிறார். வைரமுத்துவின் வரிகளும், ஏ. ஆர் .ரகுமானின் இசையும் ஒன்றை ஒன்று போட்டி போடுகின்றன.  பெண்களை வர்ணிக்க தொடங்கிவிட்டால் இந்த கவிஞர்கள் கற்பனை எல்லை மீறி பறக்கிறது. இரவு வானின் அழகையெல்லாம் இரவல் வாங்கி அந்த இறைவன் என் இதய தேவதையை படைத்துவிட்டான் என்று இந்த இளைஞன் வர்ணிக்கின்றான் .இவன் வர்ணிப்பதை கொஞ்சம் கேளுங்கள். கருங்கூந்தல் இரவினை ஒத்திருக்கிறது, கண்களோ...

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா"

மாலைப் பொழுதின் மயக்கத்திலிருந்து நீங்கள் வெளியே வரலாம். இன்னொரு மயக்கத்தில் ஆழ்த்தும் பாடலோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். நாயகியோ நாட்டியத் தாரகை. நாயகனோ ஒரு ரசிகன். சங்கீதத்தில் வந்த சந்தேகத்தை தீர்க்க நாயகியைவிடப் பொருத்தமானவர் யார் இருக்க முடியும்?  பாடலின் தொடக்கத்தில் வரும் எஸ்.பி.பி. யின் மற்றும் அவரைத் தொடர்ந்து வரும் சந்தியாவின் ஆலாபனையிலேயே நீங்கள் சொக்கித்தான் போவீர்கள். "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம் " என்று தன் முதல் சந்தேகத்தை எழுப்புகிறார்  மம்மூட்டி . அந்த மயக்கத்தில் எஸ்.பி.பி கொடுக்கும் அழுத்தம் எல்லோரையும் மயங்க வைக்கும்.  நடராஜர் சிலை ,சிலையின் வழியே பானுப்பிரியாவை ஃபோகஸ் செய்யும் கேமரா. பாலச்சந்தர் டைரக்ஷன். அருமை. காதல் மயக்கத்தில் இரவு பகல் எது என்று தெரியாத குழப்பத்தில் இருக்கும்  நாயகியோ "என் வீட்டில் இரவு அங்கே இரவா? இல்ல பகலா? எனக்கும் மயக்கம் " என்று தன் பதில் சந்தேகத்தை வினவுகிறார்.  பானுப்பிரியாவின் முகத்தில் சட் சட்டென்று மாறும் பாவனைகள் கொள்ளை அழகு . பரதம் பயின்றவர் அல்லவா? பாவனைகளுக்கு கேட்க...

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

இது ஒரு நேயர் விருப்பப் பாடல். ஆழ்மனதில் நாம் நட்டுவைத்த நினைவுகள் தான் கனவு மரங்களாக வளர்கின்றன. சில நேரங்களில் விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்கும் வினோதங்களும் நடக்கின்றன. "மாலைப் பொழுதின் மயக்கத்திலே" இந்த மங்கை கண்ட கனவைப் பற்றி கேட்போம்.ஒரு இளம் விதவையின் மனதில் தோன்றும் எண்ணங்களை இவ்வளவு அழகாக வார்த்தைகளில் வடித்து இருப்பது கவிஞர் கண்ணதாசன். ஒரு சோகப் பாடலுக்கு இவ்வளவு அழகாக சுகமான இசையமைத்துக் கொடுத்திருப்பது விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள். பி .சுசீலாவின் இனிய குரலில் "மாலை பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி , மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி ? " என்று புன்னகையுடன் பாடல் தொடங்குகிறார் சௌகார் ஜானகி . அந்தக் கனவு சுமந்த கண்கள் ,சோகம் சுமந்த முகம், அதிலும் புன்னகை  அழகின்  ஜொலிப்பு. ஒரே லொகேஷன், ஒரே காஸ்டியூம் அந்த ஆர்டினரி காஸ்ட்யூமிலும் ஒரு எக்ஸ்ட்ரா ஆர்டினரி பெர்பார்மன்ஸ். "இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி ? இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி ? " என்று விடை காண முடியாத ஒரு வினா எ...