கப்பலேறிப் போயாச்சு
நம்மில் பாதிப்பேர் சுதந்திரம் கிடைத்தபோது பிறந்து இருக்கவே மாட்டோம் . இந்த சுதந்திர குழந்தையை பெற்றெடுக்க பாரதத்தாய் இழந்தவை எத்தனை? எத்தனை கண்ணீர்? எத்தனை செந்நீர்? எத்தனை வலிகள்? எத்தனை பலிகள்? அத்தனைக்கு பிறகு அந்தக் குழந்தையை கையில் ஏந்தும் போது கிடைக்கும் ஆனந்தம் தான் எத்தனை எத்தனை? அந்த சுதந்திம் பெற்ற கணத்தை , அந்த ஆனந்தத்தை நாம் அனுபவித்தால் எப்படி இருக்கும்? ஒரு டைம் மெஷினில் ஏறி அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டு 1947 ஆகஸ்ட் 15 அன்றைக்கு செல்வோமா? இப்போ ரொம்ப கஷ்டமான விஷயம் இல்லை?ஓ கே . ஒரு சிம்பிளான விஷயம் சொல்கிறேன் இந்த பாட்டை பாருங்கள். எஞ்சாய் தட் மொமென்ட். முதலில் அந்த ப்ளூட் இசை. எனக்கு ஒரு சந்தேகம் இந்த புல்லாங்குழல் இசை மட்டும் பாரெங்கும் ஒரு பரவச காதல் உணர்வை பரவ விட்டு விடுகிறதே எப்படி என்று? அது காதல் கண்ணனின் கைக்குழலாக இருப்பதாலோ? பிறகு வரும் கோரஸ் ஒலி கேட்கும் போது உங்களுக்குள் ஒரு " ஜோஷ்" கண்டிப்பாக உருவாகும். ஜோஷ் சரியான தமிழ் அர்த்தம் ஆவேசம். மியூசிக் ஏ.ஆர்.ரஹ்மான் என்றால் கேட்கவா வேண்டும்? "கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச...